தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய இன்றும் (14) இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு அல்லது இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பொதி மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதி என்பவற்றை ஒரு கைதிக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.