பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை பதவி நீக்கம் செய்த முறை, பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரண். அவரது நியாயத்தை தெரிவிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் விசேட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர்  சபாநாயகரிடம்  கோரிக்கை  விடுத்தனர்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (03)  காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரன்ஜித் மத்தும பண்டார விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், இன்றாகும்போது சபாநாயகருக்கும் செயலாளர் சபைக்குமிடையில் பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லும்போது செயலாளர் சபைக்கு பாரிய பொறுப்புகள் இருக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post

Find Us On Facebook