அரநாயக்க, தெபத்கம பகுதியில் நேற்றிரவு அப்பகுதியில் குடியிருந்த இளைஞர் ஒருவர் திடீரேன மரணித்ததன் பின்னணியில் நிலவிய சூழ்நிலையில் இன்று ஊரடங்கு தளர்த்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.

அரநாயக்க பகுதிகளில் பொலிசார் நேற்றைய தினம் கொரோனா குறித்த விழிப்புணர்வூட்டல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இம்மரணம் நிகழ்ந்துள்ளது.

இப்பின்னணியில் குறித்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருந்தாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Find Us On Facebook