( ஜி.முஹம்மட் றின்ஸாத் )
தேசிய ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணியானது (IYAP) ஆலோசனைக் கலந்துரையடலொன்றை மட்டக்களப்பில் அண்மையில் மேற்கொண்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ் ஆலோசனைக் கூட்டத்தில் 18- 29 வயது வரையான பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.
இளைஞர்களும் சமாதானமும் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் World Vision Lanka மற்றும் இளைஞர் சமாதானம் மற்றும் பாதுகாப்பு வலையமைப்பு எனும் அமைப்புக்களை பங்குதாரர்களாக கொண்டு British Council Sri Lanka Active Citizens Programme இன் வலுவூட்டலுடன் இந்த ஆலோசனைக்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் உலகளாவிய ரீதியில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கட்டியெழுப்பி வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர் யுவதிகளின் பங்கை மீள வலியுறுத்துவதன் ஒரு பகுதியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணியானது (IYAP) நிலைத்து நிற்கக்கூடிய சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இளையவர்கள் மத்தியில் ஓர் வலையமைப்பை உருவாக்க இளைஞர் யுவதிகளால் முன்னெடுக்கப்படும் ஓர் அமைப்பாகும்.


No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.