Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் கால எல்லை நீடிப்பு


துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

2025 செப்டம்பர் 01 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க முடியும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

எனினும், நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, 2026 ஜனவரி 31 ஆம் திகதிக்குப் பின்னர் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பது துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். 

 

மேலும், 2026/2027 ஆம் ஆண்டுகளுக்கான தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான காலலெல்லையும் ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

 

குறித்த திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணங்கள் அறவிடப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.