Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பாணின் விலை அதிகரிக்க உள்ளதாக இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் அறிவிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. எனினும், அதிகரிப்புக்கான நாள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
கோதுமை மாவின் இரண்டு விநியோக நிறுவனங்கள் இரண்டு தடவையாக விலையை அதிகரித்தபோதும் பாணின் விலை அதிகரிக்கப்படவில்லை.
எனினும், தற்போது இரண்டு நிறுவனங்களும் இந்த விலையுயர்வுக்கு எழுத்துமூலம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கோதுமை மாவின் விலை உள்ளூர் சந்தையில் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.