Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஒரு வேட்பாளரின் மூலம் மக்கள் வெற்றியை அடைந்து விட முடியாது - அனுரகுமார திஸாநாயக்க

தேர்தலில் ஒரு வேட்பாளரின் வெற்றியின் மூலம் மக்கள் வெற்றியை அடைந்துவிட முடியாது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜேவிபி உட்பட்ட முக்கிய அமைப்புக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பை உருவாக்கி அதன் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்பட்டார்.
இந்தநிலையில் தமது வேட்பாளருக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தொடர்பில் தாம் கவலைக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
எனினும் நாட்டுக்கு தேவையான ஆழமான அரசியல் தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர்கள் நிறைவேற்றமுடியாத பல வாக்குறுதிகளை வழங்கினர். அடுத்தவருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தம்மை பொறுத்தவரை தீவிரவாதத்தில் இருந்து விடுபடும் அரசியல் தளத்தை அமைக்க முடிந்தது.
எனினும் ஏனைய வேட்பாளர்கள் தீவிரவாதம் மற்றும் பயபீதியை தமது வாக்குசேகரிப்பின்போது பயன்படுத்தினர்.
இந்தநிலையில் தாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நம்பிக்கையை தொடரப்போவதாக கூறியுள்ள தேசிய மக்கள் சக்தி, எவ்வித சந்தர்ப்பத்திலும் தமது போராட்டத்தை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.