இலங்கையில் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து விடைபெறவுள்ள நேபாள தூதுவர் கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரியவைச் சந்தித்தார். கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஆற்றிய சேவையை பிரதமர் பாராட்டினார்.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கு அவர் வழங்கிய பங்களிப்பிற்காக பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
நேபாளத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளினதும் பரஸ்பர முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் இதன்போது உறுதிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, மேலதிக செயலாளர் சாணிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.