ட்ரைடென்ட் நிறுவனத்தின் நிலக்கரி கையிருப்புகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஆரம்பக்கட்டத்திலிருந்தே, அவற்றை ஆய்வு செய்த ஏற்றும் துறைமுக ஆய்வகத்திற்கு முறையான அங்கீகாரம் இருக்கவில்லை என்பதை லங்கா நிலக்கரி நிறுவனம் அறிந்திருந்தது என அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் கோப் (COPE) குழு முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் இக்குழுவில் முன்னிலையாகவில்லை என்பதுடன், அவர் வேண்டுமென்றே இக்குழுவில் கலந்துகொள்வதைத் தவிர்த்துள்ளதாக அங்கே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், இக்கூட்டத்தின் போது கோப் குழுவின் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயற்படுவதாக எதிர்க்கட்சியினரால் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.