Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


72 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எம். எச்.ஏ. ஹலீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

இன்று நாம் இன மத பேதங்கள் மறந்து நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நாட்டுப்பற்றுடனும் நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம்
என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ.ஹலீம் தெரிவித்தார்.

இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எம். எச்.ஏ. ஹலீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் 1948 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் நான்காம் திகதி எமது இலங்கைத் திருநாடு
பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்தது. இத்தித்தினத்தில் சுதந்திர இலங்கையின் அரசியமைப்புச் சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து ஜனநாயக நாடாக
உருவெடுத்த இலங்கைரூபவ் ஒரு இறையாண்மை கொண்ட நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக எமது மூத்த தலைவர்கள். இனம், மதம்ரூபவ் மொழி, சாதி என்ற எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி
போராடி வெற்றியை பெற்றுத் தந்தனர்.
குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய எமது
முன்னோர்களான ரீரூபவ் பி. ஜாயாரூபவ் சேர் ராசிக் பரீத் ரூபவ் அறிஞர் சித்திலெப்பை போன்றவர்களின் முன் மாதரிகளைக் கடைப்பிடித்து நாட்டிற்காக தம்மை அர்ப்பிணத்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்

ஒரு நாட்டின் அபிவிருத்தியும் செழிப்பும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமையிலுமே தங்கியிருக்கிறது. எனவே நாம் இன மத பேதங்கள் மறந்து நாட்டில் ஐக்கியத்தையும்
ஒற்றுமையையும் நாட்டுப் பற்றையும் கட்டி எழுப்புவோம் என்று முன்னாள் அமைச்சர்
ஹலீம் மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.