கட்டார் நாட்டில் இடம்பெறும் 19ஆவது “டோஹா போரம்” சர்வதேச மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி) பங்கேற்கின்றார்.
இந்த மாநாடு “பல்முனை உலகளாவிய சமூகத்தில், புத்துயிர் பெரும் ஆட்சி” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவருகிறது.
கட்டார் நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே, அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார். இம் மாநாட்டை கட்டார் மன்னர் சேக் தமீம் ஆரம்பித்து வைத்தார்.
உலகின் பல நாடுகளிலுமிருந்து அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
நேற்று 14ஆம் திகதி இந்த மாநாடு ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.