2010 ஆம், 2015 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை சட்டபூர்வமான முறையில்
ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்ததாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாவ் மக்கீன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் தமது அமைப்பைச் சேர்ந்த 2 ஆயிரத்து 200 ற்கு மேற்பட்ட பிரதிநிதிகளை ஈடுபடுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் வகையில் நடைபெற்ற மிகச்சிறப்பான ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும் என்று கெஃபே அமைப்பின் ஊடகப் பணிப்பாளர் அரவிந்த இந்திரஜித் இதன் பொது தெரிவித்தார்.
இதற்காக அரசியல் கட்சிகள் சிறந்த பங்களிப்பை நல்கியிருந்தன. எனினும் சமூக ஊடக செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.