ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக நியமிக்குமாறு கோரி அலரி மாளிகையை சுற்றிவளைக்க சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளதாக அரசில்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமது கோரிக்கைக்கு சாதகமான பதிலை ரணில் வழங்க மறுத்தால், வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் வரையில் அலரி மாளிகையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செயற்பாடு கட்சியை பாதுகாப்பதற்கும் மற்றும் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வார இறுதிக்குள் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லையெனில், அறிவிப்பு வெளியாகும் வரையில் சுற்றிவளைப்புப் போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவாளர்கள் தயாரகியுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.