Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கெக்கிராவை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ; நடந்தது என்ன?

கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தின் வழக்குத் தடயப் பொருட்கள் களஞ்சிய அறையில் இன்று முற்பகல் தீ பரவியுள்ளது.
நீதிமன்ற வழக்குத் தடயப் பொருட்கள் களஞ்சிய அறையில் இன்று முற்பகல் 11.35 அளவில் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு சேவைப் பிரிவின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அனுராதபுரம் காவல் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், இந்த தீ சம்பவம் குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச இராசாயன பகுப்பாய்வாளரையும் சம்பவ இடத்திற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.