Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க எவ்வித அச்சமும் இல்லை



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித அச்சமும் இல்லை எனவும் அதனை வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் எந்த நடவடிக்கைகளையும் எடுப்போம்.

நாம் அன்று பொறுப்பேற்கும் போது எவரும் நினைக்கவில்லை சுதந்திரமான சமூகம் ஒன்றை எம்மால் உருவாக்க முடியும் என்று.

இன்று யாரும் வௌ்ளை வேன்களுக்கு பயம் இல்லை. வௌ்ளை வேன் காலம் முடிந்து விட்டது.

பாராளுமன்ற அமர்வுகளை பார்க்க முடியும். நாங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முடியும்.

மேலும் யோசனைகள் வந்தால் செவிமடுக்க தயார். உடன்பாட்டுக்கு வந்ததும் செயற்படுத்தவும் தயார். என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.