எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்ப வேண்டும். இல்லையெனின் அமைச்சுக்களின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அமைச்சரவை அமைச்சர்களே பதவி விலக கூடிய வாய்ப்பு உள்ளதாக ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
கொடகாவலை பகுதியில் நேற்று  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், பல வருடங்களாக கிராமங்கள் தோறும் ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்தவர்களை நிர்கதியாக்கும் வகையில் நாம் செயற்படாது, அவர்களுக்காக பதவிகளை கூட எதிர்பார்காது, அவர்களுக்கு நல்ல ஒரு சூழ்நிலையை உருவாக்குவோம் என தெரிவித்தர்.

Post a Comment

Previous Post Next Post

Find Us On Facebook