Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


அக்குரணை பிரதேச செயலக பிரிவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை.



(மொஹொமட் ஆஸிக்)

அக்குரணை பிரதேச செயலக பிரிவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

அக்குறணை பிரதேச செயலக பிரிவில் இவ்வருடம் இது வரை 75 நோயாளிகள் அடையாளம் கானப்பட்டுள்ளதாகவும் அதில் 59நோயாளிகள் டெங்கு நோயாளிகல் என உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்குறணை பிரதேச சுகாதாரவைத்திய காரியாலயத்தின் நிர்வாக மக்கள் சுகாதார பரிசோதகர் லின்டன் சேனாரத்ன தமிழ் மிரருக்கு தெரிவித்தார். 

அவர்மேலும் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அக்குறணை பிரதேசத்தில் நீரெல்லை,புளுகொஹொதென்னை, வராகஸ்ஹின்னை, தெலும்புகஹவத்தை, கஸாவத்தை, அலவத்துகொடை, ரம்புக்எல கொனகலகல, தெல்கஸ்கொட ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளிகள் அதிக அளவில் பதிவாவதாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப் பிரதேசத்தில் டெங்குநோயினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 30 ம் திகதி அக்குறணை பிரதேச செயலக பிரிவு முழுவதிலும் டெங்கு தடுப்புவேலை திட்டம் ஒன்று அமுல் படுத்த உள்ளதாகவும் அன்றைய தினம் அனைத்து வீடுகளுக்கும் விஜயம் செய்து டெங்கு பரவும் வித்த்தில் தமது வீட்டு சூழலைவைத்திருப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.