Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


நூறானியா பாடசாலையில் 11 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது.

பதுளை, ஹாலிஎல, நாரக்கல நூறானியா முஸ்லிம் வித்தியாலயத்தை
 சேர்ந்த சுமார் 11 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் எனப்படும் ஆசிரியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


கணிதப்பாடம் நடத்தும் மேற்படி 44 வயதுடை ஆசிரியர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த ஆசிரியருக்கு எதிராக பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்றுவரை சுமார் 11 முறைப்பாடுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும்  பெண் மாணவி உட்பட 26 மாணவர்கள் வரை மேற்படி ஆசிரியரினால் பாலியல் இம்சைக்கு ஆளானதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.