ஆப்பிரிக்க கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆப்பிரிக்க கிண்ணம் என்ற பெயரில் புதிய டி20 தொடரைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று பலமான அணிகள் நேரடியாகப் பங்கேற்கும். எஞ்சிய மூன்று அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
2026 ஆம் ஆண்டில் இதன் முதல் பதிப்பு ஒரு முக்கோணத் தொடராக (Tri-series) மட்டுமே நடைபெறும். இதில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் மட்டும் விளையாடும்.
அடுத்த ஆண்டு முதல் இது முழுமையான 6 அணிகள் பங்கேற்கும் தொடராக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
நமீபியாவில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்க பிராந்திய மாநாட்டில் இந்தத் தொடரைத் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் கிரிக்கெட்டை வணிகரீதியாகவும் போட்டித்தன்மையுடனும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தை இந்த மூன்று நாடுகளும் இணைந்து நடத்தவுள்ள நிலையில், இந்தத் தொடர் ஒரு முன்னோட்டமாக அமையும்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.