Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பாராளுமன்ற தெரிவுக் குழுவின் சாட்சியமளிக்கும் போது பொன்சேகா – சுமந்திரன் முறுகல்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரிடையே சூடான வாதங்கள் எழுந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து பயங்கரவாதிகளும் இதுவரையினால கைதுகளில் முழுமையாக கைது செய்யப்படவில்லை என இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் சரத் பொன்சேகா நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தார்.
பொன்சேகாவின் குறித்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுமந்திரன் இது விசேட தெரிவுக் குழுவின் நிலைப்பாடு இல்லை என எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
இவற்றினை சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த இராணுவத் தளபதி சிரித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.